செவ்வாய், 15 ஜூலை, 2008

வாணிவிழா 2004 16.10.2004



கற்ற சபை நடுவே கல்லாதான் கவிசொரிந்தால்
பெற்றவரது தலைமீது பெரும் பாரம் - உற்றவனே
வேழமுகக் கடவுள் வினைதீரும் வரந்தாராயுன்
தாளில் வீழ்வேன் தணிந்து!


தலைநிமிரக் டவியெழ்தத்  தன் வழியில் பழக்கிவிட்ட
இளங்கிழவர் ச.வே.ப இதயத்திலே போற்றுகின்றேன்

கூடிநிற்கும் அவையோரே, கும்பிட்டு அருள்வேண்டிப்
பாடும் இவனிற்குப் பதில் சொல்லச் செவிகொடுப்பீர்!


வாணிவிழாவுக்கும் எனக்கும் வரலாற்றுத் தொடர்பிருக்கு!

கானிவெலும் கூத்துமெனக் கலக்கிய ஒருசிலரால் -
நீவாணிவிழாவுக்கு வரக்கூடாதெனச் சொல்லி
நாணிய நிகழ்வுகளும் நடந்திருக்குப் பழங்கதையாய்!


சரஸ்வதியே உனக்கென்ன சபதமடி?-என்குரலின்
உரப்பினிலே நீயிருப்பாய் உயிர் கொடுப்பாய் என நினைக்க –எனை
நடுத்தெருவில் விட்டிட்டோ நடக்கின்றாய்- இப்பெடியை
தடுக்காமல் காத்திட நீ தவறியதேன் எனக் கேட்டேன்


பெண்களென்றால் இப்படித்தான் பேய்க்காட்டும் பேர்வழிகள்
என்றுதான் நினைத்தேன் நான் , இடம்கேட்டு நீ வந்தாய்
கண்களிலே ஒரு குறும்பு கன்னங்களில் குழிவிழவும்
என்மனதுக் கோட்டையுள்ளே எப்படித்தான் நீ புகுந்தாய்?

புத்தகம் எல்லாமே புதுசாக வைத்திருப்பேன்
இத்தனை நாள் என்ன செய்தாய்? இதைத் திறந்து எத்தனைநாள்??
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் தனிவிரலும் படவில்லை
பத்தினியாய் வைத்தெல்லோ பாதுகாத்தேன் புத்தகத்தை

தொட்டுப் பார்க்காமல் தூங்கிவரும் என் நோட்ஸ்
எல்லாம்கன்னி கழியாமல் காத்திருக்கும்- கடைசியிலே
என்னத்தை எழுதுவியாம் எனக்கேட்கும் எனைப்பார்த்து
புன்னகைப்பேன் நான் அதற்கு , புரிந்திருக்கும் உங்களுக்கு

(என்ர) பெடியன் டொக்ரர் எனப் புளுகும் அம்மாக்கு- என்
மனஅவியல் புரிந்திருக்க அவகாசம் கிடைக்காது
விடியல் வேளைமுதல் இரவு விழுந்து படுக்கும் வரை
கொடுமை வாழ்வெமக்கு கொடுத்தான் இறை நமக்கு!

இத்தனையும் இருந்தாலும் இதயத்திலே ஓரீரம் - மனந்திறந்து
கொட்டவொரு ஆசைவரும் குறுக்காலே மனந்தடுக்கும் (முந்திப்)
பட்டசூடு போதுமென்று படமோடும் ஆனாலும்
கெட்டவழியில்லை இதைக் கேட்பதற்கு அது விரும்பும்!

கலையின் அரசியை நான் காதலித்தேன் -அதற்காக
விலைகள் பல கொடுத்தேன் வீடுவிட்டு இங்கு வந்தேன் - அம்மாவின்
உலைச் சோற்றை , உறித்தயிரை என்பசுவின்
முலைச் சுரப்பை மற்ந்தெல்லோ முயல்கின்றேன் உனக்காக

வேப்பமரக்காற்றை வீசுமந்தத் தென்றலினைகோர்த்துப்
பூச் சொரியும் கொன்றையின் மர அடியை –முற்றத்தில்
கூத்தடிக்கும் பசுக்கன்றைக் கொஞ்சாமல் இங்கு வந்து
பார்த்த மிச்சம் என்ன பதில் நீதான் தரவேண்டும்!

என்வயலில் எல்லாமே மானாவாரிப் பயிர்ச் செய்கை
மழைவந்தால் நெல்விளையும் மற்றப்படி நீர் இறைத்து
பயிரை வளப்பதற்குப் பக்குவந்தான் வரவில்லை
கயிறு உன்கையில் காத்திடுவாய் என்தேவி!

ஏதோநான் உன்னருகில் இணைந்திருப்பேன் என நினைத்தால்
மோதத் திருவுளமோ, முத்தமிழினின் முழுவடிவே
ஆக , நான் பெற்ற அறிவெல்லாம் வீணாச்சா?
காதல் திருவுருவே கண்ணசைவு தந்திடடி!

காதல் வந்தாலும் சில்லறைக் காசோடு கொயின்ஸ்
பூத்தில்ஓதல் செய்வதற்கு (இரவு) ஒன்பது மணிவரைக்கும்
கூதல் குளிரின்றிக் குந்திநின்று வரிசை கட்டும்
பேதைப் பெடியனைப்போல் பெண்ணே நான் வரமாட்டேன்!

என்ன சாப்பிட்டீர் எப்படியிருக்கின்றீர்
முன்னர் ரீ குடிச்சு முடிச்சாச்சா –எனக்கேட்டுக்
கன்னம் உளையும் வரை கதைக்கின்ற திறமையெல்லாம்என்னிடத்தில் இல்லையடி ஏற்றிடுவேன் இக்குறையை!

எனக்காக நீயிருப்பாய் இதைத் தவிர
யாரோடும் கதைப்பாயேல் எந்தனுக்கு கண்டபடி கோபம்
வரும் உதைப்பேன் நான் ஊரரிந்த ஒருமுரடன்
இதைக்கண்ட பின்னாலும் இசைவாக இருப்பாயோ?

கையிலே புத்தகம் பாரம் கடக்க இருப்பது நெடுந் தூரம்
சட்டைப்பையிலே Human serum பார் விழியில் பெரும்
ஈரம் வைகறையில் துயிலெழவும் வருகிறது மன்ப்
பாரம் கைகொடுத்துத் தா வீரம், இதைத் தருவதற்கேன் பேரம்???!

துவண்டு விழுகையிலே தூக்கியெனை விட்டவள் நீ
தவழும் குழந்தையது தன் காலுன்றி மேலெழுந்து
அழகு நடைபயில அடி சொல்லித் தந்தவளை
தொழுதல் முறையன்றோ, தொடங்கிடுவேன் இப்போதே

இடையில் ஆயிரந்தான் இருந்தாலும் நானுந்தன்
தொடையில் வளர்ந்தவன்ரி தூயவளே அன்புசெய்து
தடைகள் என்பாதை தடுக்காமல் காப்பாற்று
முடிவில் நானுனக்கு முத்தாய்ப்பாய் நன்றி சொல்வேன்!

வணக்கம்!

புதன், 2 ஜூலை, 2008

வாணிவிழா 2007

கொழும்பு பல்கலைக்கழகம் மருத்துவ பீடம்
வாணிவிழா 2007
நீறு பூ த்த நெருப்பு


எலிவாகனத்தனை இடர்களையும் நாயகனை
கலியகல கால்பிடித்து கைதொழுதோம்- வலியகல
தம்பி எனைக்காத்து தமிழறிவு தந்திடுக
தும்பிக்கையானே துணை!


நாத மணி கேட்டு நல்லூர் தொழுதெழுந்த
போது மனதிருந்த துயரகலும்- வேலவனே
வள்ளி மனம் கவர்ந்த மணவாளா என்கவியின்
சொல்லில் உந்தன் சுரம்!


சாவே இல்லாத தமிழ் தந்து கவியென்ற
கோவை படிப்பித்த கோவே- ச. வே
பஞ்சாட்சரப் புலவன் பாதம் பணிவதற்கு
நெஞ்சமே தொழுது நினை!

இரண்டாயிரம் தொடங்கி இன்றைவரை உந்தனுக்கு
பண்டாரத்தின் சங்காய்ப் பதிலிறுக்கும்- தண்டாமரை
ஏறியமர்ந்த இளங்குயிலே சரஸ்வதியே இக்கவியை
காறித் துப்பாமல் கார்.


தோளை அமர்த்துகின்ற சுமைதந்த Internship
நாளை முடியுமென்ற நம்பிக்கை –வேளையொடு
வேலை தேடுகிற வேளை வந்ததுபார் ஒன்
கோலுக்கு ஓடுகிற குணம்

உள்ள நெருப்பெல்லாம் ஊதியணைக்காமல்
கள்ளமாய் இருக்கும் கனற்பொறியை – துள்ளிவரும்
சொல்லில் வடித்தால் சுகமில்லைப் பலபேர்க்குத்
தள்ளிப் போகுதாம் தமிழ்.!

நொங்குபனை தொங்குகனி வெம்பலின்றித் தந்துமகிழ்
சங்கம்வளர் இன்பமது மூன்று- கவி
தந்திடுமே நல்ல ஒரு சான்று!

குண்டுவெடி கண்டபடி உண்டகதை அன்றுஅதை
வென்றவர்கள் உள்ள தமிழ்த் தேசம் -அதன்
வேலியிலே கந்தகத்தின் வாசம்!


தொண்டனென நின்றவர்கள் தொய்ந்து மனமாறியதால்
துண்டுபட்டுப் போனது பார் கிழக்கு- நீதித்
தூண்டியிலே சிக்கியதாய் வழக்கு!


வைத்தகுறி பற்றியடி சுட்ட ரவை தொட்டஉடல்
செத்ததுபார் தமிழனது வாழ்வு- நிதமும்
சேருகிற தொகையிலி;ல்லை தாழ்வு!


இது வயது வந்தவர்களுக்கான கவிதை
விளங்காமல் போனால்
தப்பபிப்பிராயம் கொண்டு
தடுமாறக் கூடாது.
Replication இல் நடந்த தவறுகளை திருத்தும்
டி என் ஏ போல்
திருத்தப்பட்டு வருகிறது
வரிகள்.
இடையிடையே சிலசில Nonsence codon கள்
எட்டிப்பார்த்தாலும் அவையும்
தவிர்க்க முடியாத சில தங்கல்கள்.


Term ஆன Primi க்கு
Cervix ஐ பார்த்திட்டு
ARM செய்தேனே பாரும்- அவள்
ஏலாதெண்டு சொன்னாலும் கேளும்

CTG flat ஆனால் Changing her position என

செய்தாலும் Reactive ஆய் இல்லை- ஈற்றில்
சீசரிலை பிறந்ததுபார் பிள்ளை!


IUDஅம்மாக்கு FHS எழுதுகிற
மோடுகளும் HOஆய் இருக்கு- அந்த
Motion இலை ஏறுமெந்தன் கடுப்பு!

காதல் என்பது ECG Changes
இல்லாமல் வரும் MIபோன்றது. அதன்போது
Aggrigation ஐ தடுக்க
Aspirin கோடுக்க வேண்டியுள்ளது.
Angina வரும்போதே
அவதானமாக இல்லாவிட்டால்
அவுட் ஆக வேண்டியதுதான்!

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது
இன்று உடைக்கப் பட்டிருக்கும்
Anatomy block இன் தேமா மரத்தில்
ஏறியாய்ந்த பூக்களைக் கொண்டு நாங்களே மாலை கட்டிக்கொண்டதால்
சரஸ்விபூசையின் மொத்தச் செலவு
150 ரூபாயால் குறைக்க முடிந்தது.
நேற்று அவளிடம் கேட்டேன்
உனக்கு மாலை கட்டத் தெரியுமா என்று
என் கழுத்தில் போடாவிட்டாலும்- கடைசி
கடவுளின் கழுத்திலாவது போடுவதற்கு!


நீண்ட நாட்களின் பின் சந்தித்த பள்ளித்தோழி
கேட்டாள் , நீர் இப்போது நிறையப் பொய் சொல்கிறீராம்!
நான் சொன்னேன் நீயும்
Community medicine படித்துப்பார்
புரியும்!!!


எப்படிப் போகிறது வாழ்க்கை என்று கேட்டான் Faculty kஇடிக்காததால்

Uk போய் நல்லாய் இருக்கும் என் நண்பன்
சொன்னேன்,

எப்படியடா இருக்கிறாய் என்று

ஒவ்வொருநாளும் கேட்கும் அம்மாவின்

ஆசிகளுடனும்நீ திருந்தப் போவதில்லை என்று அவள் திட்டி eluthiya SMS udanum வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!

தமிழ் படித்ததுக்கொண்டிருக்கும்
இன்னொருவன் சொன்னான் இலக்கியம்!
இராமன் சூர்ப்பனகையின் முலையைக் கொய்யாமல்
தலையைக் கொய்திருந்தால்
அழவேண்டி வந்திருக்காது
அவனும் அவளும்
எனக்கும் அது சரிபோலவே பட்டது.


சமாதானம், உடன்படிக்கை, சர்வதேச சமூகம்
இந்த மூன்று வார்த்தைகளும் இல்லாமல்
எப்போது வானொலி செய்தி வாசிக்கிறதோ
அப்போததான் எமக்கு விடுதலை!!
வணக்கம்.